தமிழ் ஸ்டுடியோ.காம்
அறிவிப்பு
வணக்கம் தோழர்களே...
நாங்கள் தமிழ் ஸ்டுடியோ.காம் (www.thamizhstudio.com) எனும் குறும்படங்களுக்கான இணையத்தளம் ஒன்றை நடத்தி வருகிறோம். எங்கள் இணையதளத்தின் நோக்கங்கள் கீழே விளக்கப்பட்டுள்ளன. எங்கள் இணையதளத்தின் முக்கிய நோக்கமே மற்றவர்கள் பயன் பெற வேண்டும் என்பதே. எனவே உங்களின் மேலான கருத்துகளை எங்களுடன் பகிர்ந்து கொண்டும், எங்கள் தளம் பயனுள்ளது என்றுக் கருதினால் உங்கள் வட்டங்களுக்கு அறிமுகம் செய்து வைக்கும்படியும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
www.thamizhstudio.com
தமிழில் ஒரு மாற்று ஊடகம் அமைக்கும் முயற்சியில் தொடங்கப்பட்டதே இந்தத் தளம். குறும்படத்துறை, தமிழ் இலக்கியம், வரலாறு போன்ற துறைகளுக்கு தமிழ் ஸ்டுடியோ.காம் முன்னுரிமை அளித்து செயல்படுகிறது. எந்த செயலை செய்தாலும் அதை புதிதாக, புதிய கோணத்தில் செய்யும் முயற்சியில் தமிழ் ஸ்டுடியோ.காம் தொடர்ந்து செயல்பட்டுக்கொண்டே இருக்கும்.
தமிழில் மாற்று ஊடகம் அமைக்கும் முயற்சியின் முதல் படியாக குறும்படத் துறையை / அது சார்ந்த ஆர்வலர்களை ஊக்குவிக்கும் செயலை தமிழ் ஸ்டுடியோ.காம் தொடர்ந்து செய்துக் கொண்டே இருக்கும். இலக்கியங்கள், புகழ் பெற்ற சிறுகதைகள், உலகில் உள்ள மாற்ற நாட்டு இலக்கியங்கள், அழிந்து வரும் வரலாற்று சின்னங்கள், மொழி, கலாச்சாராம் சார்ந்த ஆவணங்கள், கல்வெட்டு ஆவணங்கள், போன்றவற்றை குறும்படங்களாக / ஆவணப்படங்களாக எடுத்து அவற்றை மக்களிடையே பரவலாக கொண்டு போய் சேர்க்கும் முயற்சியில் தமிழ் ஸ்டுடியோ.காம் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டுள்ளது. மேலும் அவ்வாறு எடுக்கப்படும் குறும்படங்கள் / ஆவணப்படங்கள் போன்றவை உலகத்தரத்தில், புதிய தொழில்நுட்பங்களோடு எடுக்கப்படவேண்டும் என்கிற அக்கறையும் இங்கு கவனிக்கப்படும். புதிதாக குறும்படத்துறையில் நுழைய விரும்பும் ஆர்வலர்கள் அனைவருக்கும் அது பற்றிய முழுமையான ஒரு புரிதலை தமிழ் ஸ்டுடியோ.காம் ஏற்படுத்தும்.
மேலும் அவர்களுக்கு தேவையான அனைத்து வகையான உதவிகளையும் தமிழ் ஸ்டுடியோ.காம் செய்துக் கொடுக்கும் என்பதையும் இங்கு தெரியப்படுத்துகிறோம். ஆர்வமும் முயற்சியும், துடிப்பும், படைப்புத்திறனும், எதையும் புதுமையாக சிந்திக்கும் ஆர்வமும் உள்ளவரா நீங்கள்? எனில் உங்களுக்கான களம் அமைத்துக்கொடுக்கும் பணியை தமிழ் ஸ்டுடியோ ஏற்றுக்கொள்ளும்.
இளம் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் பொருட்டு அவர்களுக்காகவும் ஒரு களம் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே தளத்தை பார்வையிடும் உங்களுக்கும் எழுதும் ஆர்வமோ, ஒளிப்படம் எடுக்கும் ஆர்வமோ, அல்லது ஏதோ ஒருத் துறையில் (அறிவியல், சமூகம், வானவியல் போன்ற துறைகளையும் சேர்த்து) உங்களுக்கு ஆர்வம் இருந்தாலும் அதை வெளிப்படுத்த தமிழ் ஸ்டுடியோ.காம் உங்களுக்கு களம் அமைத்துக் கொடுக்கும்.
நன்றி, தமிழ் ஸ்டுடியோ.காம் (www.thamizhstudio.com) Copyright:thinnai.com
Sunday, December 28, 2008
Friday, July 25, 2008
நீ எங்கே
நீ எங்கே: விவரணப் படம்
உச்சிக் குடும்பனும் இல்ல. . .உளுவத் தலையனும் இல்ல!திரைக்குப் பின்னால் இருந்துகொண்டு முதுகில் வியர்வை வழிய தோல் பாவைகளைக் கைகளாலும், கால்களாலும் ஆட்டுவித்த தோல்பாவைக் கூத்துக் கலைஞர்களின் இயக்கம் மெல்ல மெல்ல நின்றுபோனதை ஆவணப்படுத்துகிறது ரமணி இயக்கியுள்ள "நீ எங்கே?" விவரணப் படம்.மிக மிக அரிதாகிப்போன ஒரு பறவையினத்தை உலகின் வெவ்வேறு வன மூலைகளில் தேடி அலைகிற "டிஸ்கவரி சேனல்" பயணத்தைப் போல அமைந்துள்ளது ரமணி இயக்கியுள்ள இந்தப் படம். தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களிலுள்ள ஏதேனும் ஒரு கிராமத்தில் பிளாஸ்டிக் வளையல் வியாபாரிகளாகவோ, மங்கிய வெளிச்சத்தில் ரஜினியையும் சிம்ரனையும் தத்ரூபமாக "இமிடேட்" செய்ய முயன்றுகொண்டேயிருக்கும் ரெக்கார்டு டான்ஸ்காரர்களாகவோ வாழ்ந்துகொண்டிருக்கும் தோல் பாவைக் கூத்துக் கலைஞர்களைப் படம் முழுவதும் ரமணி தேடுகிறார்.தேடப்படும் சில கலைஞர்கள் இறந்துவிட்டதை சோகம் உலர்ந்த முகங்களுடன் மனைவி, மக்கள் தெரிவிக்கிறார்கள். பெரும்பாலான கலைஞர்களின் வீடுகளில் தோல் பாவைகள் பரணில் ஏற்றப்பட்டுவிட்டன. நாம் வாழும் காலத்தை நகைச் சுவைத் திங்கள், காதல் செவ்வாய், வெள்ளி மின்னல்கள் என்று பகுத்து வைத்திருக்கும் கேபிள் டிவிகளின் வளர்ச்சியினூடே தங்கள் கலை மறக்கப்பட்டுவிட்ட கோபமும் சோறு போட்டுவந்த பாரம்பரியக் கலையை இழந்த சோகமும் இவர்களுக்கு இருக்கிறது.எந்த மொழியானாலும் ராமாயணக் கதைகள் தோல் பாவைக் கூத்தில் அதிகம் நிகழ்த்தப்படுவதை ரமணியின் படம் காட்டுகிறது. தமிழில் மட்டும் கூத்து அயோத்திக்குள் நுழைவதற்கு முன் திரேதா யுகத்திலிருந்து விடுபட்டு, நிகழ்காலத்தைப் பிரதிபலிக்கும் நகைச்சுவை கையாளப்படுகிறது. ராமனும் இலட்சுமணனும் தோன்றுவதற்கு முன்னர் உச்சிக் குடும்பனும் உளுவத் தலையனும் வந்து, ஊரில் ஏற்படும் எந்தப் பிரச்சினையையும் தேங்காய், பழம் சகிதம் பூசையாக்கிவிடத் துடிக்கும் கோவில் பூசாரியைக் கேலி செய்கிறார்கள். கர்நாடக, மகாராஷ்டிர மாநிலங்களில் வாழும் கலைஞர்கள் சமூகத்தின் இடதுகைத் தீண்டலிலிருந்து தப்பிப் பொருளாதார வசதிகள் அமையப் பெற்றிருக்கிறார்கள். ஆனால் தமிழத்துக் கலைஞர்களோ மாற்றுத் தொழிலுக்கான வாய்ப்பு சரியாக அமையாமல் நாடோடிகளாகத் திரிந்துகொண்டிருக்கின்றனர்.இயக்கத்தில் அதிகபட்ச சுதந்திரத்தைக் கையாளும் ரமணி சூழ்நிலை மீது கொண்டுள்ள கவனத்தைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். பரணிலிருந்து தோல் பாவைகளை எடுக்கும்போது வருஷக்கணக்கான உறக்கத்திலிருந்து விடுபட்டு ஓடும் கரப்பான் பூச்சி அனுமதிக்கும் மிகக் குறுகிய கால அவகாசத்தைக்கூட ரமணி பயன்படுத்திக்கொள்கிறார். படக்குழுவினரைக் கண்ட கலைஞர்களின் உடல் மொழியில் செயற்கைத்தனம் குடியேறுவதற்கு முன்னால் கேமரா அவர்களுடைய வீட்டில் முன்னறிவிப்பின்றி நுழைந்துவிடுகின்றது. ரமணிக்கும், அவர்களுக்குமான அறிமுகப் புன்னகைகூட பதிவு செய்யப்படுவதிலிருந்து தப்பவில்லை.வலுவான காட்சியமைப்பும் திறமையான படத்தொகுப்பும் கொண்ட இப்படத்தில் உறுத்தலான சில அம்சங்களும் இருக்கத்தான் செய்கின்றன. கூத்திலிருந்து சினிமா பாடல்களுக்கு ஆடும் தொழிலுக்கு நகர்ந்துவிட்ட ஒரு பெண் படக்குழுவினரின் வேண்டு கோளுக்கிணங்கத் தன் வீட்டில்ஆடும் நடனக் காட்சியைப் பார்க்கும்போது மனசுக்குள் அசூயை தெறிக்கிறது. மேடையில் நிகழும் நடனக் காட்சிகள் இக்கலைஞர்களின் சோகத்தைச் சொல்லி முடித்துவிட்ட நிலையில், இக்காட்சிகள் தேவை குறித்த கேள்வி எழுகிறது. நடனத்தையே பிழைப்பாகக் கொண்ட அக்கலைஞர்களின் தொழில் சார்ந்த பிரச்சினைகளையும் பேசவைத்திருக்கலாம்.நாளைய கூத்தில் ராமருக்குப் பட்டாபிஷேகம் நடைபெறுமென வசிஷ்டருக்குரிய பெருமையுடன் கேரளக் கலைஞர் நாள் குறிப்பதையும், கூத்து முடிந்த பிறகு நிச்சயம் மழை பெய்யும் என்று எதிரொளியின் நம்பிக்கையைப் பற்றிக் கொஞ்சமும் கவலைப்படாமல் உறுதியுடன் கூறுவதையும் பார்க்கையில் தங்கள் கலைமீது இவர்கள் கொண்டிருக்கும் பெருமிதத்தின் உச்சத்தையும், புறக்கணிக்கப்பட்டுவிட்ட வேதனையிலிருந்து விடுபட முடியாத தவிப்பையும் ஒருசேர உணர முடிகிறது. கேமராவின் பார்வைக்கு வைக்கப்படும் தோல் பாவைகளை நோக்கி குழந்தை நகரும்போது ""இனி உச்சிக் குடும்பனும் இல்ல. . . உளுவத் தலையனும் இல்ல"" என்று அதனுடைய தாய் விரக்தியை மறைத்துச் சிரிப்பது மறக்க முடியாத இன்னொரு காட்சி.
நன்றி: காலச்சுவடு -49
உச்சிக் குடும்பனும் இல்ல. . .உளுவத் தலையனும் இல்ல!திரைக்குப் பின்னால் இருந்துகொண்டு முதுகில் வியர்வை வழிய தோல் பாவைகளைக் கைகளாலும், கால்களாலும் ஆட்டுவித்த தோல்பாவைக் கூத்துக் கலைஞர்களின் இயக்கம் மெல்ல மெல்ல நின்றுபோனதை ஆவணப்படுத்துகிறது ரமணி இயக்கியுள்ள "நீ எங்கே?" விவரணப் படம்.மிக மிக அரிதாகிப்போன ஒரு பறவையினத்தை உலகின் வெவ்வேறு வன மூலைகளில் தேடி அலைகிற "டிஸ்கவரி சேனல்" பயணத்தைப் போல அமைந்துள்ளது ரமணி இயக்கியுள்ள இந்தப் படம். தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களிலுள்ள ஏதேனும் ஒரு கிராமத்தில் பிளாஸ்டிக் வளையல் வியாபாரிகளாகவோ, மங்கிய வெளிச்சத்தில் ரஜினியையும் சிம்ரனையும் தத்ரூபமாக "இமிடேட்" செய்ய முயன்றுகொண்டேயிருக்கும் ரெக்கார்டு டான்ஸ்காரர்களாகவோ வாழ்ந்துகொண்டிருக்கும் தோல் பாவைக் கூத்துக் கலைஞர்களைப் படம் முழுவதும் ரமணி தேடுகிறார்.தேடப்படும் சில கலைஞர்கள் இறந்துவிட்டதை சோகம் உலர்ந்த முகங்களுடன் மனைவி, மக்கள் தெரிவிக்கிறார்கள். பெரும்பாலான கலைஞர்களின் வீடுகளில் தோல் பாவைகள் பரணில் ஏற்றப்பட்டுவிட்டன. நாம் வாழும் காலத்தை நகைச் சுவைத் திங்கள், காதல் செவ்வாய், வெள்ளி மின்னல்கள் என்று பகுத்து வைத்திருக்கும் கேபிள் டிவிகளின் வளர்ச்சியினூடே தங்கள் கலை மறக்கப்பட்டுவிட்ட கோபமும் சோறு போட்டுவந்த பாரம்பரியக் கலையை இழந்த சோகமும் இவர்களுக்கு இருக்கிறது.எந்த மொழியானாலும் ராமாயணக் கதைகள் தோல் பாவைக் கூத்தில் அதிகம் நிகழ்த்தப்படுவதை ரமணியின் படம் காட்டுகிறது. தமிழில் மட்டும் கூத்து அயோத்திக்குள் நுழைவதற்கு முன் திரேதா யுகத்திலிருந்து விடுபட்டு, நிகழ்காலத்தைப் பிரதிபலிக்கும் நகைச்சுவை கையாளப்படுகிறது. ராமனும் இலட்சுமணனும் தோன்றுவதற்கு முன்னர் உச்சிக் குடும்பனும் உளுவத் தலையனும் வந்து, ஊரில் ஏற்படும் எந்தப் பிரச்சினையையும் தேங்காய், பழம் சகிதம் பூசையாக்கிவிடத் துடிக்கும் கோவில் பூசாரியைக் கேலி செய்கிறார்கள். கர்நாடக, மகாராஷ்டிர மாநிலங்களில் வாழும் கலைஞர்கள் சமூகத்தின் இடதுகைத் தீண்டலிலிருந்து தப்பிப் பொருளாதார வசதிகள் அமையப் பெற்றிருக்கிறார்கள். ஆனால் தமிழத்துக் கலைஞர்களோ மாற்றுத் தொழிலுக்கான வாய்ப்பு சரியாக அமையாமல் நாடோடிகளாகத் திரிந்துகொண்டிருக்கின்றனர்.இயக்கத்தில் அதிகபட்ச சுதந்திரத்தைக் கையாளும் ரமணி சூழ்நிலை மீது கொண்டுள்ள கவனத்தைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். பரணிலிருந்து தோல் பாவைகளை எடுக்கும்போது வருஷக்கணக்கான உறக்கத்திலிருந்து விடுபட்டு ஓடும் கரப்பான் பூச்சி அனுமதிக்கும் மிகக் குறுகிய கால அவகாசத்தைக்கூட ரமணி பயன்படுத்திக்கொள்கிறார். படக்குழுவினரைக் கண்ட கலைஞர்களின் உடல் மொழியில் செயற்கைத்தனம் குடியேறுவதற்கு முன்னால் கேமரா அவர்களுடைய வீட்டில் முன்னறிவிப்பின்றி நுழைந்துவிடுகின்றது. ரமணிக்கும், அவர்களுக்குமான அறிமுகப் புன்னகைகூட பதிவு செய்யப்படுவதிலிருந்து தப்பவில்லை.வலுவான காட்சியமைப்பும் திறமையான படத்தொகுப்பும் கொண்ட இப்படத்தில் உறுத்தலான சில அம்சங்களும் இருக்கத்தான் செய்கின்றன. கூத்திலிருந்து சினிமா பாடல்களுக்கு ஆடும் தொழிலுக்கு நகர்ந்துவிட்ட ஒரு பெண் படக்குழுவினரின் வேண்டு கோளுக்கிணங்கத் தன் வீட்டில்ஆடும் நடனக் காட்சியைப் பார்க்கும்போது மனசுக்குள் அசூயை தெறிக்கிறது. மேடையில் நிகழும் நடனக் காட்சிகள் இக்கலைஞர்களின் சோகத்தைச் சொல்லி முடித்துவிட்ட நிலையில், இக்காட்சிகள் தேவை குறித்த கேள்வி எழுகிறது. நடனத்தையே பிழைப்பாகக் கொண்ட அக்கலைஞர்களின் தொழில் சார்ந்த பிரச்சினைகளையும் பேசவைத்திருக்கலாம்.நாளைய கூத்தில் ராமருக்குப் பட்டாபிஷேகம் நடைபெறுமென வசிஷ்டருக்குரிய பெருமையுடன் கேரளக் கலைஞர் நாள் குறிப்பதையும், கூத்து முடிந்த பிறகு நிச்சயம் மழை பெய்யும் என்று எதிரொளியின் நம்பிக்கையைப் பற்றிக் கொஞ்சமும் கவலைப்படாமல் உறுதியுடன் கூறுவதையும் பார்க்கையில் தங்கள் கலைமீது இவர்கள் கொண்டிருக்கும் பெருமிதத்தின் உச்சத்தையும், புறக்கணிக்கப்பட்டுவிட்ட வேதனையிலிருந்து விடுபட முடியாத தவிப்பையும் ஒருசேர உணர முடிகிறது. கேமராவின் பார்வைக்கு வைக்கப்படும் தோல் பாவைகளை நோக்கி குழந்தை நகரும்போது ""இனி உச்சிக் குடும்பனும் இல்ல. . . உளுவத் தலையனும் இல்ல"" என்று அதனுடைய தாய் விரக்தியை மறைத்துச் சிரிப்பது மறக்க முடியாத இன்னொரு காட்சி.
நன்றி: காலச்சுவடு -49
Sunday, July 20, 2008
சலனம் - குறும்படங்களுக்காண இணையம்
www.salanam.com
சலனம், இணையத்தில் தமிழ் குறும்படங்களுக்கென்றே இயங்கும் தளம். குறும்படங்கள் மட்டுமின்றி அது சார்ந்த செய்திகளையும் நேர்காணல் போன்றவையும் வெளியிடுகிறது.
சலனம் பற்றி சலனத்தில்...............
வணக்கம்
தமிழில் சற்று வித்தியாசமானதோர் இணையம் இது. 'நமக்கென்றோர் நலியாக்கலையுடையோம்" - எனத் தேடலும், பதிவுமாக இதன் பக்கங்கள் விரிவடையும்.
கலைகள் அனைத்தையும் ஒருங்கிணைக்கும் அரங்க மற்றும் திரைக்கலை, இரசனைக்கான தளம்தான் இந்தச் சலனம்.
புத்தாயிரத்தில் உருவான இவ்வெண்ணக்கரு 'அப்பால் தமிழ்"த் தாயில் உருவகமாகி, மெல்லத் தவழ்ந்து, நடைபயின்று, நிமிர்கிறது.
பிரான்சில், லூமியர் சகோதரர்களால் முதல் அசையும் பட ஒளிப்பதிவைச் செய்த 1895 மார்ச் 19ம் நாளை மகிழ்வுடன் நினைவு கூர்ந்து இணையவலைப் பதிவாகிறது சலனம்.
நம் சமூக கலைசார் ஈடுபாட்டால் ஒன்றிணையவும், பணியாற்றவும், தன்னார்வத்துடன் கைகோர்த்த ஆற்றலாளர்களின் கூட்டு வெளிப்பாடாகவே சலனம் பதியமாகின்றது.
இதேவேளை புலம்பெயர் வாழ்வுச் சூழலுக்கமைவான பல்தேசிய சமூகக்கலைகளுடன்; நேசவுறவாடும். அவற்றில் ‘நல்லவை உள்வாங்கி அல்லவை அகற்றி’ தனக்கான தடமமைத்துச் செல்லும்.
கடந்த நூற்றாண்டின் பிற்பாதியிலிருந்து நம் சமூகம் பூமிப் பந்தில் பெற்றுக்கொண்ட – கொண்டிருக்கும் எண்ணற்ற அனுபவங்கள் நம்மவர்களாலேயே கலைப்படைப்புகளாகப் பதிவுறவேண்டும் என்பதிலும் சலனம் அக்கறை கொள்கிறது.
கலை ஆற்றலாளர்கள், ஆர்வலர்கள், கரிசனையாளர்கள், இரசனையாளர்கள், விமர்சகர்கள், பார்வையாளர்கள் எனப் பலரும் தமது இனிய பயணத்தைத் சலனத்தில் தொடர வாழ்த்துகள்.
பாரிஸ்19.03.2006 ஞாயிறு வள்ளுவர் ஆண்டு 2037 பங்குனி 06
வணக்கம்
இணையவழி கைகுலுக்குகிறோம்
வாழ்க வளமுடன்!
சலனம், இணையத்தில் தமிழ் குறும்படங்களுக்கென்றே இயங்கும் தளம். குறும்படங்கள் மட்டுமின்றி அது சார்ந்த செய்திகளையும் நேர்காணல் போன்றவையும் வெளியிடுகிறது.
சலனம் பற்றி சலனத்தில்...............
வணக்கம்
தமிழில் சற்று வித்தியாசமானதோர் இணையம் இது. 'நமக்கென்றோர் நலியாக்கலையுடையோம்" - எனத் தேடலும், பதிவுமாக இதன் பக்கங்கள் விரிவடையும்.
கலைகள் அனைத்தையும் ஒருங்கிணைக்கும் அரங்க மற்றும் திரைக்கலை, இரசனைக்கான தளம்தான் இந்தச் சலனம்.
புத்தாயிரத்தில் உருவான இவ்வெண்ணக்கரு 'அப்பால் தமிழ்"த் தாயில் உருவகமாகி, மெல்லத் தவழ்ந்து, நடைபயின்று, நிமிர்கிறது.
பிரான்சில், லூமியர் சகோதரர்களால் முதல் அசையும் பட ஒளிப்பதிவைச் செய்த 1895 மார்ச் 19ம் நாளை மகிழ்வுடன் நினைவு கூர்ந்து இணையவலைப் பதிவாகிறது சலனம்.
நம் சமூக கலைசார் ஈடுபாட்டால் ஒன்றிணையவும், பணியாற்றவும், தன்னார்வத்துடன் கைகோர்த்த ஆற்றலாளர்களின் கூட்டு வெளிப்பாடாகவே சலனம் பதியமாகின்றது.
இதேவேளை புலம்பெயர் வாழ்வுச் சூழலுக்கமைவான பல்தேசிய சமூகக்கலைகளுடன்; நேசவுறவாடும். அவற்றில் ‘நல்லவை உள்வாங்கி அல்லவை அகற்றி’ தனக்கான தடமமைத்துச் செல்லும்.
கடந்த நூற்றாண்டின் பிற்பாதியிலிருந்து நம் சமூகம் பூமிப் பந்தில் பெற்றுக்கொண்ட – கொண்டிருக்கும் எண்ணற்ற அனுபவங்கள் நம்மவர்களாலேயே கலைப்படைப்புகளாகப் பதிவுறவேண்டும் என்பதிலும் சலனம் அக்கறை கொள்கிறது.
கலை ஆற்றலாளர்கள், ஆர்வலர்கள், கரிசனையாளர்கள், இரசனையாளர்கள், விமர்சகர்கள், பார்வையாளர்கள் எனப் பலரும் தமது இனிய பயணத்தைத் சலனத்தில் தொடர வாழ்த்துகள்.
பாரிஸ்19.03.2006 ஞாயிறு வள்ளுவர் ஆண்டு 2037 பங்குனி 06
வணக்கம்
இணையவழி கைகுலுக்குகிறோம்
வாழ்க வளமுடன்!
Tuesday, July 15, 2008
Friday, June 20, 2008
Friday, May 23, 2008
மாற்றுத்திரை
அன்புத் தமிழ்நெஞ்சங்களே!
வெள்ளித்திரையும் சின்னத்திரையும் நமது பண்பாட்டையும் சமுதாயத்தையும் சீரழித்து வரும் வேளையில், இவற்றிற்கு மாற்றாக குறும்படங்களும் ஆவணப்படங்களும் உலகெங்குமுள்ள தமிழ்ச்சிந்தையாளர்களாலும் சமூக ஆர்வலர்களாலும் சீரிய சிந்தனைகளைத்தாங்கி வந்து கொண்டிருக்கின்றன. எனினும் இவற்றை மக்களிடம் கொண்டுசெல்லும் ஊடகங்களும், சந்தை வாய்ப்புகளும் குறைவாக உள்ள இவ்வேளையில் பல தளங்களிலுமிருந்து கிடைக்கப் பெற்ற தகவல்களை உள்ளடக்கிய ஒரு தளமாக இது உருவாக்கப்பட்டுள்ளது. மேலதிக தகவல்கள் கிடைக்கப்பெற்றோர் மின்னஞ்சலில் அனுப்பி வைக்கவும்.
நன்றி!
வெள்ளித்திரையும் சின்னத்திரையும் நமது பண்பாட்டையும் சமுதாயத்தையும் சீரழித்து வரும் வேளையில், இவற்றிற்கு மாற்றாக குறும்படங்களும் ஆவணப்படங்களும் உலகெங்குமுள்ள தமிழ்ச்சிந்தையாளர்களாலும் சமூக ஆர்வலர்களாலும் சீரிய சிந்தனைகளைத்தாங்கி வந்து கொண்டிருக்கின்றன. எனினும் இவற்றை மக்களிடம் கொண்டுசெல்லும் ஊடகங்களும், சந்தை வாய்ப்புகளும் குறைவாக உள்ள இவ்வேளையில் பல தளங்களிலுமிருந்து கிடைக்கப் பெற்ற தகவல்களை உள்ளடக்கிய ஒரு தளமாக இது உருவாக்கப்பட்டுள்ளது. மேலதிக தகவல்கள் கிடைக்கப்பெற்றோர் மின்னஞ்சலில் அனுப்பி வைக்கவும்.
நன்றி!
Subscribe to:
Posts (Atom)