Wednesday, January 14, 2009

வரவேற்போம் வாழத்தூண்டும் வரலாறுகளை

வரவேற்போம் வாழத்தூண்டும் வரலாறுகளைகெங்கை குமார்உழைக்கும் மக்களின் உள்ளக் குமுறல்களை ஓங்கி ஒலிப்பதாக கூறிக் கொண்டி ருக்கும் வெகுமக்கள் ஊடகங்களின் ஒவ்வொரு நகர்வையும் நாம் கண்காணித்திருக்க வேண்டும். சூழ்நிலை கேற்றவாறு பரபரப்புச் செய்திகளாகக் குடிசைகளை எறிப்பதை தீவிபத்து என்றும், கற்பழிப்புகளை விபச்சாரம் என்றும், கொத்தடிமை முறைகளை குழந்தை களை விற்றல் என்றும், உண்மைக்கு புறம்பான செய்திகளை வெளியிட்டுக் கொண்டிருக் கின்றன.இவைகளுக்கு மாற்றாக உழைக்கும் மக்களைப் பற்றியும் ஒடுக்கப்பட்ட மக்களைப் பற்றியும் அவர்களது உள்ளக் கிடக்கைகளையும் விழிப்புணர்வுப் படைப்புகளாகக்குகிற முயற்சிகளும் நடக்கின்றன. சூழலுக் கேற்றவாறு சில சமயங்களில் அவை வெளிவந்து கொண்டுதான் இருக்கின்றன. இவைகளில் கூட அனுதாபங்களையும் பிறரின் பச்சாதாபங் களையும் பெறுகின்ற வகையில்தான் பெரும்பாலும் வருகின்றனவே தவிர உண்மையான விடுதலைக் கருத்தியாகவோ அல்லது அதை நோக்கி இட்டுச் செல்பவைகளாகவோ இன்னும் செழுமை பெறவில்லை.உழைக்கும் மக்கள் தங்களின் கூன் முதுகை உயர்த்தி நெஞ்சை நிமிர்த்தி அநீதிக்கு எதிராகவும், ஒடுக்குதலுக்கு முரனாகவும் தங்களை அடையாளப்படுத்தி, அணிதிரண்டு போராடிய போராட்டங்கள் பல நடந்திருந்தாலும், இன்றும் நிகழ்ந்துக் கொண்டிருந்தாலும், அவைகளின் வரலாற்றுப் பதிவுகள் என்பது இன்றளவும் மேம்போக்ககாகத்தான் பதிவாகிக் கொண்டிருக்கின்றன.``வரலாற்றைத் திருத்தி பதிவு செய்துக் கொண்டிருக்கும் வந்தேதிகாளல்தான் நம் முடைய உண்மைச் சுவடுகளும் மூடிமறைக்கப்பட்டு வருகிறது’’ என நாம் பிறரைக் குற்றம் சுமத்திக் கொண்டிருக்கிறோமே தவிர, நமக்கான வரலாறுகளை, காயங்களை புறை யோடிப் போயிருக்கும் அழுகிய புண்களாக நாம் எப்போது முறையாகப் பதிவு செய்யப் போகிறோம்?ஆங்காங்கு நடத்துக் கொண்டிருக்கும் உரிமை மீறல்களையும் ஒடுக்கப்பட்டோருக்கு எதிரான வன்கொடுமைகளையும் அட்டூழியங்களையும் எங்கோ ஒருசிலர் ஒரு சில உதவி களோடு, பதிவுகளாக படம் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள்.தமிழகத்தைப் பொறுத்தவரையிலும் தலித் விடுதலைக்காக குரல் கொடுத்துக் கொண்டுவரும் சில அமைப்புகளும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும், சில இடங்களில் இயங்கிக் வருகின்றன. என்றாலும், அவைகளுக்கான ஆவணப்பதிவுகளின் நோக்கம் வரலாற்றுப் பதிவுகளாக ஒருபோதும் இருந்ததில்லை. தங்களது அமைப்பு மற்றும் சுயதேவைகளை அடிப்படையாகக் கொண்டே உருவாக்கப்பட்டவைகளாகவே இருக் கின்றன.எப்படியிருந்தாலும் ஒருசில ஆர்வலர்கள், இளம்படைப்பாளிகள் இந்த சமூகத்தின் மீது தாம் கொண்டுள்ள தன்னார்வ அக்கறையின் காரணமாக பிறப்பால் தலித்துகளாக இல் லாத நிலையிலும், வர்க்கத்தால் கூலிகளாக இல்லையென்றாலும், உழைக்கும் மக்களின் பிரச்சனைகளை, அவர்களின் வாழ்வியல் போராட்டங்களை அதிலும் குறிப்பாக தலித்து களின் ஒருங்கிணைந்த போராட்டங்களின் மூலம் பெற்ற வெற்றிக் கொண்டாட் டங்களையும், பண்பாடு மாறாமல் பதிவு செய்துத் தரும்போது, அவைகளுக்கான முக்கியத் துவத்தை முன்னிலைப் படுத்தாமல், அந்தப் படைப்பாளிகளுக்கான அங்கீகாரத்தை கொடுக்காமல், சாதி முத்திரை குத்திப்பார்த்தும் வர்க்கப் பின்னணியை பொருத்திப் பார்த் தும் அவர்களையும், அவர்களது படைப்புகளையும் ஓரங்கட்டுவது என்பது எந்த வகையில் நேர்மையானதாகும்?காஞ்சனை சீனிவாசனின் நதியின் மரணம், மதுரை அமுதனின் பீ, செய்யாறு ஓம் பிரகாஷின் புதுயுகம், தலீத் பூமி சேலம் ஆண்டோவின் தும்பலில் இன்று குடியரசு தினம், முருக சிவக்குமாரின் விடுதி, பாரதி கிருஷ்ணகுமாரின் ராமய்யாவின் குடிசை என இன்னும் பல அற்புதமான படைப்பாளிகளும், அவர்களது ஈடு இணையற்ற படைப்பு களும் இன்னும் பட்டியல்களாகத்தானே இருந்து கொண்டிருக் கின்றன?குறுங்குழுவாதம் பேசிக் கொண்டும், குரூர சிந்தனையை வளர்த்துக் கொண்டும் சிலர் பேசிக் கொண்டிருக்கும் அதே வேளையில் இத்தகைய படைப்பாளிகளும், படைப்புகளும் பல் வேறு தளங்களில் பலவிதமான பாதிப்புகளையும் அதிர்வுகளை யும் ஏற்படுத்திக் கொண்டுதானிருக்கின்றன. அவைகளை ஜீர ணிக்க முடியாமல் முரண்பாடாக சிலர் முணகிக்கொண்டி ருப்பதினால் என்ன பயனை அடைந்துவிட முடியும்!கருத்துச் சுதந்திரமும், சமூக அக்கறையும் கைகோர்த்துக் கொண்டு வரும்போதுதான் நம்மீது திணிக்கப்பட்டுள்ள, நாமாக உள்வாங்கிக் கொண்டுள்ள வர்க்க, வர்ண- முரண் பாடுகளை உடைத்துக் காட்டமுடியும். அவைகளைக் கடந்து வெளிவர முடியும். அதை விட்டுவிட்டு தர்மம் பேசுகிறேன் பேர் வழி என்று போலி புரட்சிவாதம் பேசிக் கொண்டுஅநீதியான சமூக கட்டமைப்பை ஞாயப்படுத்திக் கொண்டு தங்களுக்கான சார்புத் தன்மையோடு வர்ண- வர்க்கவாதம் நடத்திக் கொண்டு, உண்மையான படைப்பாளிகளையும் அவர்களது படைப்புகளையும் புறக்கணிக்கிறார்கள் என்றால் இப்படிப்பட்ட வர்களை எந்த ரகத்தில் பொருத்திப் பார்ப்பது?கடந்த ஜூலை 14 அன்று சென்னை டான் போஸ்கோ சமூகத் தொடர்பு கல்விமையம்-தீபிகா அரங்கில் அதிர்வுகள் திரைப்பட இயக்கத்தின் சார்பில் `` ஊடகமும் உழைக்கும் மக்களும்” என்ற தலைப்பில் கருத்தரங்கம் ஏற்பாடு செய்யப் பட்டது. “ஆவணப்படங்களும் அவை தரும் பாதிப்புகளும்” என்ற தலைப்பில் காஞ்சனை சீனிவாசன் பேசினார். பாரதி கிருஷ்ண குமார் கருத்துரை வழங்கினார்.`அடங்கமறு’ என்ற ஆவணக் குறும்படத்தை உருவாக்கிய இளம் படைப்பாளி ஜே.முத்துக் குமார் பேசும்போது, “இது ஆவணக் குறும்படமல்ல. நான் இதைக் குறும்படமாகத்தான் எடுத்தேன்” என்றார்.இந்த “அடங்கமறு” படைப்பானது, 2002ம் ஆண்டு திண் ணியம் கிராமத்தில் இரண்டு தலித்துகளை மனித மலம் திண்ணவைத்த சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டதாகும். இந்த சம்பவமும் செய்தியும் உண்மையானதே. அதை அப்படியே நடிகர்களைக் கொண்டு உருவாக்கி அதன் மேல் எந்தவிதமான விமர்சனத்தையும் வைக்காமல், எந்தவிதமான விளக்கமும் கொடுக்காமல் படைப்பாக்கி வழங்கப்பட்டிருக்கிறது.தலித் மக்கள் அவமானப்படுத்தப்பட்டதும், அதன் உச்சமாக மனித மலத்தை அவர்களது கையாலே அள்ளி உண்ணச் செய் ததும் உலகறிந்த ஒரு மோசமான வன்கொடுமை. இது வரலா றாக பதிவு செய்யப்படாமல், “ எனது கற்பனையால் உருவாக்கப் பட்ட புனைகதைக் குறும்படம்” என்பது நியாயம்தானா? இது குறித்து பார்வையாளர்கள் மத்தியிலிருந்து பல்வேறுவிதமான கேள்விகள் எழுந்ததைத் தொடர்ந்து இந்தப் படைப்புக்கு பின் புலமாயிருந்த பல அம்சங்ளை முத்துக்குமார் பகிர்ந்து கொண் டார்.பார்வையாளர்களிடமிருந்து, “இந்தச் சம்பவம் நடந்த கால கட்டத்தையோ, இதில் சம்பந்தப்பட்டவர்களின் உணர்வுப் பதிவு களையோ ஏன் இதில் இடம்பெறச் செய்யவில்லை” என கேள்வி கள் எழுந்தன. “நீங்கள் குறிப்பிடுகின்ற அனைத்து அம்சங் களையும் உள்ளடக்கிய இன்னொரு பிரதியை நான் பாதுகாப் பாக வைத்திருக்கிறேன். அதுதான் ஆவணக் குறுபம்படம். அதை இங்கு திரையிட நான் தவறிவிட்டேன்” என முத்துக் குமார் பதிலளித்தார்.படைப்பாளிகள் தங்களை முதன்மைப்படுத்திக்கொள்ளவும், அறிவு ஜீவித்தனத்தை வெளிக்காட்டிக்கொள்ளவும் எத்தனை வகையான அணுகுமுறைகளைக் கையாள்கிறார்கள் என்பதற் கான ஒரு உதாரணம்தான் மேற்கண்ட விவாதம். தமக்கென ஒரு குறுகிய வட்டத்தை அமைத்துக்கொண்டு, தன்னை மட்டுமே முதன்மைப்படுத்தி முன்னேறத் துடிக்கும் சிலரால்தான் “தலித்துகளின் வேதனையை தலித்துகளால்தான் உணர முடியும். தலித்துகள் அல்லாதவர்கள் தலித்துகளைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை” என்ற வாதம் கிளம்புகிறது. இத் தகைய போக்கு எல்லா இடங்களிலுமே இருக்கிறது. தலித் துகளிலேயே கூட தலித் விரோதிகள் இருக்கிறார்கள் என்ப தையும் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். எப்படியிருந்தாலும் தலித் அக்கறை, சமூக அக்கறை, அனைத்துமே சமூக விடு தலைக்கான முன்னெடுப்பாக இருக்க வேண்டும் என்பதுதான் நமது விருப்பம்.படைப்பாளிகளும், படைப்புகளும் வணிகமய நோக்கில் பார்வையாளர்களை மட்டும் மையப்படுத்தாமல் ஆய்வுக் கண் ணோட்டத்துடன் உண்மைகளை மட்டுமே ஆவணப்பதிவு களாக, வரலாறுகளாக வலம் வர வேண்டும். அதற்கான நியாய மான வாய்ப்புகளை தனி நபர்களோ, நிறுவனங்களோ எவ்வித உள்நோக்கமுமின்றி வழங்க முன்வர வேண்டும்.வர்ணபேதமும், வர்க்க முரண்பாடுகளும் ஒடுக்கப்படும் மக்க ளின் வரலாற்றை அதைத் தொடர்ந்து கடைப்பிடித்துக்கொண்டு வரும் போலிப் புரட்சியாளர்களை அடையாளம் காட்ட வேண்டிய கட்டாயத்தில் நாமிருக்கிறோம்.எனவே, எதையும் நேர்மையோடு அணுகி, கூர்மைப்படுத்திப் பார்க்கும் பக்குவம் இளம் படைப்பாளிகளுக்கும் வர வேண்டும். அத்தகைய முயற்சிகளை எவ்வித உள்நோக்கமுமின்றி, அங் கீகரிக்கின்ற பக்குவத்தை அனைவருமே வளர்த்துக் கொண்டாக வேண்டும். அப்போதுதான் உழைக்கும் மக்களை யும், ஒடுக்கப்படும் மக்களையும் உரிமைக்காகப் போராட வைக்க, நாமும் உந்து சக்திகளாய் இருந்திருக்கிறோம் என்பது வரலாற் றில் பதிவு பெறும். இத்தகைய வரலாறுகள்தான் நாளைய தலை முறையினருக்கு உண்மையான உந்து சக்திகளாக இருக்க முடியும்.பரவலாக இருந்துகொண்டிருக்கிற குறுங்குழுவாதங் களைத் தவிர்த்து, கூட்டுச் சிந்தனைகளை வளர்ப்போம். விழிப் புணர்வையும், விமர்சனப் பார்வையையும் வீதிக்குக் கொண்டு வருவோம். ஊடக ஜனநாயகத்தை உழைக்கும் மக்கள் சார்ந்த அணுகுமுறைகளால் உலகுக்கு அறிமுகப்படுத்துவோம். அதன் மூலம் உழைக்கும் மக்களுக்கான உரிமைப் போராட்டத்தில் உரிமையோடு பங்கெடுப்போம்.

நன்றி : உரக்க
http://urakkappesu.blogspot.com/2007/08/blog-post.html